Latest Movie :

முல்லைத்தீவு அருகே இன்று அதிகாலையில், விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தாக்குதலில் 15 கடற்படை வீரர்கள் பலி

முல்லைத்தீவு: முல்லைத்தீவு அருகே இன்று அதிகாலையில், விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் நடத்திய திடீர் தாக்குதலில் கடற்படையின் சூப்பர் டோரா படகு மூழ்கடிக்கப்பட்டது. 15 வீரர்கள் பலியானார்கள்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் கூறுகையில்,

முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்குத் தொடங்கி 6 மணி வரை கடற்புலிகள், கடற்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர்.

இதில், கடற்படையினரின் சூப்பர் டோரா கடற் கரும்புலிகளின் தாக்குதலில் முற்றாக மூழ்கடிக்கப்பட்டது. அதில் இருந்த 15 கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரின் மற்றொரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இம்மோதலில் கடற்புலிகள் நால்வரும் கடற்கரும்புலிகள் இருவரும் மரணமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger