Latest Movie :

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் தேமுதிக தொண்டர் தீக்குளிப்பு!


இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் மாவட்டம் வானியம்பாடியில், தேமுதிக செயலாளர் தீக்குளித்தார். படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாணிம்பாடி அருகே உள்ளது வள்ளிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளாராக இருப்பவர் சீனிவாசன் (22). இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போன சீனிவாசன் இது குறித்து அடிக்கடி தனது நண்பர்களுடன் உணர்ச்சி பிளம்பாக பேசுவாராம்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் உடல் பாதி எறிந்தது. இருப்பினும் அவரை காப்பாற்றி வாணிம்பாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சீனிவாசன் மாற்றப்பட்டார்.

தகவல் அறிந்த போலீசார் வாணிம்பாடி சீனிவாசனிடம் தீக்குளிப்புக்கான காரணத்தை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger